ads

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள எஸ்.ஜே.சூர்யாவின் ‘இறவாக்காலம்'

iravaakaalam movie shooting

iravaakaalam movie shooting

மெர்சல் படத்தில் வில்லன் கெட்டப்பில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற எஸ்.ஜே.சூர்யா தற்பொழுது  ‘இறவாக்காலம்'  படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர், டீசர் முன்னதாகவே வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றிருந்தது. இந்த படத்தினை அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். இவர் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த  அதிரடி த்ரில்லர் 'மாயா' படத்தினை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.      

இந்த படத்தில் இரண்டு நாயகிகள் களமிறங்கியுள்ளனர். அதில் எஸ்.ஜே.சூர்யாவின் ஜோடியாக  ‘அதே கண்கள்’ புகழ் ஷிவதா நாயர் இணைந்துள்ளார். மற்றொரு நாயகியாக ‘மாலை நேரத்து மயக்கம்’ வாமிகா நடித்துள்ளார். தேனாண்டாள் பிலிம் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஹேமா ருக்மணி தயாரித்து வரும் இப்படத்தில் ரான் யோஹான் இசைமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணியில் ஈடுபட ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார்.    

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இன்னும் சில நாட்களில் படத்தின் அனைத்து ஷுட்டிங்கும் முடிவடைந்து விடுவதாகவும் படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் அவரது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இன்னும் சில நாட்களில் படத்தின் ட்ரைலர், இசை மற்றும் படத்தின் வெளியீட்டு தேதி போன்றவை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.     

    

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள எஸ்.ஜே.சூர்யாவின் ‘இறவாக்காலம்'