ads

அன்புசெழியனுக்கு ஆதரவு -விஜய் ஆண்டனி ட்விட்

vijay antony support anbuchezian

vijay antony support anbuchezian

கந்துவட்டி கொடூரத்தினால் தற்கொலை செய்து கொண்ட அசோக் குமார் குடும்பத்தினர் படும் வேதனையை நானும் அனுபவித்ததாக இசையமைப்பாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான விஜய் ஆண்டனி அவரது ட்விட்டரில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.    

நடிகர் திரு.சசிகுமார் அவர்கள், மிகவும் சிறந்த இயக்குனர் மற்றும் நல்ல மனிதன். அவரது உறவினர் திரு. அசோக் குமார் அவர்களின் தற்கொலை நினைத்து நன் மிகவும் மனவேதனைப்படுகிறேன். திரு அசோக் குமார் அவர்கள் தனது மனைவி, பெற்றோர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு, தற்கொலை செய்யும் முடிவை தவிர்த்திருக்க வேண்டும்.

நான் கடந்த 6 வருட காலமாக, தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் திரு. அன்புசெழியனிடம் பணம் வாங்கித்தான் படங்கள் எடுத்து வருகிறேன். வாங்கிய பணத்தை முறையாக திரும்ப செலுத்தியும் வருகிறேன். இதுநாள் வரையில் அவர் என்னிடம் சரியான முறையில் தான் நடந்து வருகிறார். அனைவரும் அவரை சற்று மிகைப்படுத்தி சித்தரிபதாக்க தோன்றுகிறது.

திரைப்பட துறையில் 99% தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள், கடம் வாங்கி படம் எடுத்து தான் இந்நாள் வரையில் முன்னேறி இருக்கிறார்கள்.         திரு.அசோக் குமார் அவர்களின் மரணம் தற்கொலையின் கடைசி மரணமாக இருக்க வேண்டும். நான் தற்கொலைக்கு எதிரானவன். ஏனென்றால் தற்கொலை செய்துகொண்ட என் தந்தையால் நானும், என் தாய் மற்றும் என் குடும்பம் அனுபவித்த கஷ்டம், எனக்கு நன்றாக தெரியும்.

            எனக்கு கடன் இருக்கிறது, உழைத்து கொடுக்கின்றேன்        

அன்புசெழியனுக்கு ஆதரவு -விஜய் ஆண்டனி ட்விட்