ads

அஜித் வசனத்தை ட்விட்டரில் பயன்படுத்திய இயக்குனர்

அஜித் வசனத்தை ட்விட்டரில் பயன்படுத்திய இயக்குனர்

அஜித் வசனத்தை ட்விட்டரில் பயன்படுத்திய இயக்குனர்

சில மாதங்களுக்கு முன்பு ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த 'அன்பானவன் அடங்காதவன் அசரதவன்' படத்தில் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்திருந்தார். இதில் தமன்னா, ஷ்ரேயா என இரு நாயகிகள் நடித்திருந்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகம் 75% படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் படத்தின் முதல் பாகம் படுதோல்வியை சந்தித்ததால் இரண்டாம் பாகத்தை தொடராமல் கைவிடப்பட்டது.  

இதனை தொடர்ந்து முதல் பக்கத்தை விமர்சித்தும், இரண்டாம் பாகம் வருமா வராத என்று இயக்குனர் ஆதி ரவிச்சந்திரனை கிண்டல் செய்யும் விதமாக கேள்விகள் வெளிவந்துகொண்டே இருந்தது. இதனை பார்த்து பல நாட்கள் அமைதியாக இருந்த இயக்குனர் ஆதி சமூக வலைத்தளமான ட்விட்டரில் தல அஜித்தின் வசனத்தை மாஸ் பறக்கும் வகையில் பதிவு செய்துள்ளார்.    

இதில் ‘இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும் எல்லா சூழலிலும் நீ தோத்துட்ட தோத்துட்டன்னு உன் முன்னாடி நின்னு அலறுனாலும், நீயா ஒத்துக்குற வரைக்கும் எவனாலும் எங்கேயும் எப்பவும் உன்ன ஜெயிக்க முடியாது, நெவர் எவர் கிவ் அப் என்று அஜித்தின் ‘விவேகம்’ பட வசனத்தை பதிவு செய்ததோடு என் முதுகில் குத்தியவர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

  

அஜித் வசனத்தை ட்விட்டரில் பயன்படுத்திய இயக்குனர்