ads

இயக்குனர் சுசீந்திரன் வெளியிட்ட புது பட தகவல்

director suseenthiran new movie title genius

director suseenthiran new movie title genius

'நெஞ்சில் துணிவிருந்தால்' வெற்றிக்கு பிறகு இயக்குனர் சுசீந்திரன் பல புது முகங்களை வைத்து 'ஏஞ்சலினா' படத்தினை இயக்கி வந்தார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்து தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த படத்தில் காமெடி நடிகர் சூரி முக்கிய வேடத்தில் வளம் வந்துள்ளார். ‘ஆறாம் திணை ஃபிலிம்ஸ் – ஸ்ரீ சாய் சிரஞ்சீவி ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாராகி வரும் இப்படத்தில் 'விக்ரம் வேதா' புகழ் சாம்.சி.எஸ் இசையமைக்க ஜி.சி.ஆனந்தன் கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். மேலும் இவருடன் இணைந்து  ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு பணியில் ஈடுபட தியாகு படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார்.   

ஏஞ்சலினா படத்தினை தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் மற்றொரு புது படத்தினை இயக்கவுள்ளார். இந்த புது படத்தினை பற்றிய தகவலை சுசீந்திரன் அவரது ட்விட்டரில் பதிவு செய்து தகவலை வெளியிட்டுள்ளார்.  அதில் 'ஏஞ்சலினாவை தொடர்ந்து எனது இயக்கத்தில் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கி உள்ளோம். இப்படத்திலும் புதுமுக நடிகர்களே நடிக்கின்றனர். இன்றைய சமுதாய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு கல்வியை நாம் திணிப்பதால் அவர்கள் எந்த அளவு மன அழுத்தத்திற்கு ஆளாகின்றார்கள்....அப்படி மன அழுத்தத்திற்கு ஆளான ஒருவன், அவன் மனநிலை, அவன் வாழ்க்கை என ஒரு கதாபாத்திரத்தை சுற்றி கதை அமைத்துள்ளேன். இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் முக்கியமான பதிவாக இருக்கும் என நம்புகிறேன்' என்று பதிவு செய்துள்ளார்.        

இயக்குனர் சுசீந்திரன் வெளியிட்ட புது பட தகவல்