ads

சுந்தர் சியின் கலகலப்பு 2 படத்தின் கதை

sundar c explains kalakalappu 2 movie story

sundar c explains kalakalappu 2 movie story

சுந்தர் சியின் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'கலகலப்பு 2'. இந்த படம் முன்னதாக வெளிவந்த 'கலகலப்பு' படத்தை போன்று காமெடியை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்த படம் உலகமெங்கும் அடுத்த மாதம் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் ஜெய், ஜீவா, நிக்கி கல்ராணி, சிவா, கேத்ரினா தெரசா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  

இந்த படம் குறித்து இயக்குனர் சுந்தர் சி கூறும்போது "முன்பு வெளியான 'கலகலப்பு' படத்தில் ஒரு ஓட்டலை மையப்படுத்தி கதை இருக்கும். இந்த படத்தில் வாடிக்கையாளரே இல்லாத மேன்சனை வைத்து கஷ்டப்படும் ஒருவன், மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் ஒருவன், பாரம்பரிய சொத்தை இழந்து தவிக்கும் மற்றொருவன், இவர்கள் மூன்று பேரும் ஒரே பாதையில் சந்தித்தால் என்னவாகும்  என்பதே இந்த படத்தின் கதை. கதாநாயகிகளில் ஒருவர் தாசில்தார், மற்றொருவர் படகோட்டி. மேலும் இவர்களுடன் சதீஸ், யோகிபாபு, முனீஸ்காந்த் உள்ளிட்ட 10 காமெடி நடிகர்களை இந்த படத்தில் இணைத்துள்ளேன்.

நிகழ்வுகள் காசியில் நடப்பது போன்ற கதையை உருவாக்கியுள்ளேன். ரசிகர்கள் என்ன விரும்புகிறார்களளோ அதை தான் கதையாக உருவாக்கி வருகிறேன். எப்போதும் கதாநாயகர்களுக்காக கதை எழுதி தயாரிப்பது இல்லை. கதையை எழுதிய பிறகு பொருத்தமான நடிகர், நடிகைகளை தேர்வு செய்கிறேன். கலகலப்பு 2 படம் ரசிகர்கள் அனைவரும் விரும்பும் படமாக இருக்கும். இந்த படத்திற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்தனர். இதை தொடர்ந்து 'சங்கமித்ரா' படத்திற்கான கிராபிக்ஸ் பணிகள், திரைக்கதை போன்ற பணிகள் நடந்து வருகிறது. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது." என்று அவர் தெரிவித்துள்ளார்.

சுந்தர் சியின் கலகலப்பு 2 படத்தின் கதை