ads

அடுத்த கட்டத்திற்கு செல்லவிருக்கும் சூர்யா 36 ஷூட்டிங்

suriya 36 first schedule finish

suriya 36 first schedule finish

சூர்யா நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளிவந்த 'தானா சேர்ந்த கூட்டம்' 25வது நாளாக வெற்றி கரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றி படத்தினை தொடந்து தனது 36வது படத்தினை இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பின் அனைத்து வித காட்சிகளையும் படமாக்கப்பட்டு விட்டதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவலை இப்படத்தினை தயாரித்து வரும் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டரில் பதிவு செய்து வெளியிட்டுள்ளது. மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்பின் பணியில் படக்குழு மும்பரமாக இறங்கியுள்ளது.   

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என இரு நாயகிகள் சூர்யாவிற்கு ஜோடியாக இணைத்துள்ளனர். மேலும் படத்தின் முக்கிய வேடமான வில்லன் கெட்டப்பில் தெலுங்கு திரையின் முன்னணி நடிகர் ஜெகபதி பாபுவிடம் பேச்சி வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வந்துள்ளது. இந்த படத்தில் சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு பணியில் ஈடுபட, ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்.  

நடிகர் சூர்யா இப்படத்தினை தொடர்ந்து தனது 37வது படத்திற்கான தகவலையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். இந்த படத்தினை ஒளிப்பதிவாளர் கேவி.ஆனந்த் இயக்கத்தில் உருவாக்கவுள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதத்தில்  துவங்க திட்டமிட்டுள்ளனர். 

அடுத்த கட்டத்திற்கு செல்லவிருக்கும் சூர்யா 36 ஷூட்டிங்