ads

வணங்காமுடி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு

வணங்காமுடி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு

வணங்காமுடி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு

அஜித் முதல் படமான அமராவதியை இயக்கிய செல்வா இப்பொழுது 'தனி ஒருவன்' அரவிந்த் சாமி கதாநாயகனாக வைத்து 'வணங்காமுடி' படத்தினை இயக்கிவருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்றதோடு, படத்தில் வரும் ஒரு பாடலுக்காக தூத்துக்குடி துறைமுகத்தில் பிரமாண்டமான முறையில் மிக பெரிய செட் அமைத்து படமாக்கப்பட்டிருக்கின்றது. 

முதல் கட்ட படப்பிடிப்பினை முடித்த வணங்காமுடி படக்குழுவினர் அடுத்த கட்ட இரண்டாம் படப்பிடிப்பை வருகிற நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் கொடைக்கானலில் தொடங்கயிருக்கின்றனர். இங்கு 5 நாட்கள் நடக்க இருக்கும் படப்பிடிப்பில் த்ரில்லிங்கான ஒரு சேஸிங் காட்சியை படமாக்கவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். 

‘மேஜிக் பாக்ஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தில் கொடைக்கானலை தொடர்ந்து இறுதியாக சென்னையில் படப்பிடிப்பை எடுக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.  

அரவிந்த் சாமியுடன் ரித்திகா சிங், நந்திதா, சிம்ரன், சாந்தினி தமிழரசன் முதலானோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வரும் இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்ரன் இவர்களுடன் இணைந்து நடிக்கயிருக்கிறார். டி.இமான் இசையமைக்க, கோகுல் ஒளிப்பதிவு செய்கிறார்.

வணங்காமுடி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு