ads

குற்றவாளிகள் நாடாளக்கூடாது-கமல் ஹாசன்

kamal haasan twitter about criminals

kamal haasan twitter about criminals

நடிகர் கமல் ஹாசன் விரைவில் அரசியலில் களம் இறங்கவுள்ளார். அதற்கான வழிகளை தீர்மானித்து அதன்படி மக்களின் குறைகளை கேட்டறிந்து சில முக்கிய பிரமுகர்களை சந்தித்தும் வருகிறார். சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த கருத்துக்களை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிடுவார். இவர் சமீபத்தில் விவசாயத்திற்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்திருந்தார். 

இதனை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடைபெற்றது. இதனை அடுத்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வசித்திருந்த வேதா நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை அரசியல் பிரமுகர்கள் மற்றும் சசிகலா உறவினர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் கமல் ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் " ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின்,அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய்" என தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகள் நாடாளக்கூடாது-கமல் ஹாசன்