Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

போலீஸ் அதிகாரி பெரிய பாண்டியன் உடலுக்கு நடிகர் கார்த்தி அஞ்சலி

karthi visit periya pandiyan family

'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடிகர் கார்த்தி போலீஸ் அதிகாரியாக ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு சென்று பவேரிய கொள்ளை கூட்டத்தை ஒழிப்பார். இதே போன்று மதுர வாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் நகை கடை கொள்ளை கூட்டத்தை பிடிக்க ராஜஸ்தான் சென்ற போது கொள்ளையர்களால் சுடப்பட்டு பரிதாபமாக உயிரழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுக்க சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீர மரணம் அடைந்த பெரியபாண்டியன் உடல் சென்னைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. 

அவருடைய உடலுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமை செயலர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதனை அடுத்து இவரது உடல் சென்னையில் இருந்து மாலை 6 மணிக்கு மதுரை கொண்டு செல்லப்பட்டது. ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரது சொந்த ஊரான தேவர்குளம் அருகே உள்ள சாலைப்புதூருக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை அடுத்து அவரது உடல் காவல் துறை அணிவகுப்புடன் ஊர் வலமாக கொண்டு சென்று 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.அவரது குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க தனியாக ஒரு வங்கி கணக்கு தொடரப்பட்டது. தமிழக அரசு பெரிய பாண்டியன் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் அளித்துள்ளது. இந்நிலையில் உயிரிழந்த பெரிய பாண்டியன் உடலுக்கு நடிகர் கார்த்தி நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

 

போலீஸ் அதிகாரி பெரிய பாண்டியன் உடலுக்கு நடிகர் கார்த்தி அஞ்சலி