Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

லிப்டில் சிக்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

லிப்டில் சிக்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

நேற்று மதுரையில் நடக்கவுள்ள தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். விமானம் இரவு 7.30 மணிக்கு புறப்படுவதாக இருந்தது ஆனால் அவர் முன்னதாகவே வந்துவிட்டதால் விமான நிலையத்தில் முக்கிய அதிகாரிகள் தங்கும் ஓய்வு அறையில் காத்திருந்தார். நேரம் வந்ததும் புறப்படுவதற்காக மூன்றாவது தளத்திலிருந்து முதல் தளம் வருவதற்காக முதல்வர் மற்றும் அவரது பாதுகாப்பு படையினர் உள்பட 7பேர் லிப்டில் ஏறினர். ஆனால் நடுவழியில் லிப்டில் இருந்த முதல்வர் உள்பட 7பேரும் சிக்கிக்கொண்டனர்.மேலும் லிப்டில் இருந்த பாதுகாப்பு படையினர் அவசர கால சைரனை ஒலித்தனர். இதனால் விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த அதிகாரிகள் லிப்டை சரிசெய்தனர். இதனால் முதல்வர் 10 நிமிடங்களாக லிப்டில் மாட்டிக்கொண்டார். இதனையடுத்து அருகிலுள்ள எஸ்கலேட்டர் வழியாக அவர் பத்திரமாக மீட்கப்பட்டு வேறொரு தனியார் விமானத்தில் மதுரை சென்றார். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தை பெரும் பரபரப்பாகியது. 

லிப்டில் சிக்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி