Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கோவை : 7பேர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த ஆடி கார் ஓட்டுநர் கைது

கோயம்பத்தூரில் நடந்த விபத்தில் 7பேர் பலியாகியுள்ளனர். இதற்கு காரணமாக இருந்த ஆடி கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை, சுந்தராபுரம் பகுதியில் வழக்கம் போல பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்லும் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் உள்பட ஏராளமானோர் பேருந்திற்காக காத்து கொண்டிருந்தனர். அப்போது பொள்ளாச்சியில் இருந்து கோயம்பத்தூர் நோக்கி ஆடி சொகுசு கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. அப்போது பயணிகள் நிழற் கூடத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது பலமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் ஆட்டோவினுள் இருந்த மூன்று பேர் மற்றும் பேருந்திற்காக நின்று கொண்டிருந்த பயணிகள் உள்பட 7பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது தவிர அருகில் நின்று கொண்டிருந்த மூன்று பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை அருகில் இருந்த பொது மக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த கோர விபத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது. சில மணிநேரத்திற்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்துக்கு காரணமாக இருந்த ஆடி கார் ஓட்டுனரை பொது மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். போலீசார் அவரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் 7பேர் உயிருக்கு காரணமாக இருந்த ஆடி கார் ஓட்டுநர் போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை : 7பேர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த ஆடி கார் ஓட்டுநர் கைது