Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கேரளா வெள்ளத்தால் பச்சிளம் குழந்தையுடன் இருட்டில் சிக்கி தவிக்கும் குடும்பம்

கேரளாவில் ஆலுவா, கடுங்கல்லூர் என்ற பகுதியில் வெள்ளத்தால் இருட்டில் குழந்தையுடன் 7பேர் கொண்ட குடும்பம் சிக்கி தவிக்கின்றனர்.

கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஏராளமான மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை காப்பாற்ற மீட்பு குழுவினர் ஹெலிகாப்டர் மூலமும், படகுகள் மூலமும் தேடுதலை தீவிரப்படுத்தியுள்ளது. மீட்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். ஆனாலும் இன்னும் லட்சக்கணக்கான மக்கள் உதவியின்றி வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.அவர்களை காப்பாற்ற சமூக வலைத்தளங்கள் பெரிதும் உதவியாக இருப்பதால் ஏராளமான சமூக ஆர்வலர்கள் மீட்பு குழுவினர் எண்களை பகிர்ந்து வருகின்றனர்.

வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களும் தங்களை காப்பாற்றும் படி வீடியோ மூலமும் குறுஞ்செய்தி மூலமும் தகவலை அனுப்பி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆலுவா என்ற இடத்தில் கடுங்கல்லூர் என்ற பகுதியில் பச்சிளம் குழந்தையுடன் 7பேர் கொண்ட குடும்பம் உதவியின்றி இருட்டில் சிக்கி தவிப்பதாக குடும்ப தலைவர் பிரேமானந்த் என்பவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். கடுங்கல்லூரில் கிழக்கு பகுதியில் இருக்கும் இவர்களை மீட்க இதுவரையில் எந்த மீட்பு குழுவினரும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் மக்கள் அவர்களுக்கு உதவுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

கேரளா வெள்ளத்தால் பச்சிளம் குழந்தையுடன் இருட்டில் சிக்கி தவிக்கும் குடும்பம்