Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சென்னையில் ஓடும் ரயிலில் பிரிந்த இரண்டு பெட்டிகள் பயணிகள் அதிர்ச்சி

சென்னையில் ஓடும் ரயிலில் இருந்து இரண்டு பெட்டிகள் மட்டும் தனியே பிரிந்துள்ளது. இதனை கண்டு பயணிகள் அலற தொடங்கினர்.

சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் சென்றுள்ளது. இந்த மின்சார ரயில் ஊரப்பாக்கம் பகுதியை அடைந்த போது திடீரென இரண்டு பேட்டிகள் வேகம் குறைந்துள்ளது. வேகம் குறைந்ததால் பெட்டிகளில் இருந்த பயணிகள் சன்னல் வழியே எட்டி பார்த்த போது 10 பெட்டிகள் கொண்ட ரயில் மட்டும் முன்னாள் சென்று கொண்டிருந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலற தொடங்கினர். இந்த தகவல் அறிந்த ட்ரைவர் நடு வழியில் ரயிலை நிறுத்தியுள்ளார். இதன் பிறகு பிரிந்த இரண்டு பெட்டிகள் சிறுது தூரம் ஓடி பின்னர் நின்றுள்ளது. தகவல் அறிந்து வந்த ரயில்வே அதிகாரிகள் பிரிந்த ரயில் பெட்டிகளை சோதித்து பார்த்ததில், ரயில் பெட்டிகளை இணைக்கும் கப்ளிங் உடைந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனை தற்காலிகமாக சரிசெய்து கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டதால் ஒரு மணிநேரத்திற்கு மேலாக அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. பின்னர் உடைந்த ரயிலை வேறு தண்டவாளத்திற்கு மாற்றிய பின்னர் ரயில் சேவை அங்கு இயக்கப்பட்டது. 

சென்னையில் ஓடும் ரயிலில் பிரிந்த இரண்டு பெட்டிகள் பயணிகள் அதிர்ச்சி