Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

அஸ்வினியின் உடலுக்கு ஏராளமான பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

அஸ்வினியின் உடலுக்கு ஏராளமான பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி.

சென்னையில் மீனாட்சி கல்லூரியை சேர்ந்த மாணவி அஸ்வினி கல்லூரியின் முன்பு அழகேசன் என்பவரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. படுகொலை செய்யப்பட்ட அஸ்வினியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அஸ்வினிக்கு பாதுகாப்பு அளிக்காததால் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது எனவும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். மேலும் அழகேசனை உடனை கைது செய்ய வேண்டும் எனவும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கீழ்பாக்கம் உதவி ஆணையரை அஸ்வினியின் உறவினர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதன் பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட அஸ்வினியின் உறவினர்களிடம் காவல் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் போலீசார், அழகேசனுக்கு அஸ்வினி கொலை வழக்கில் தக்க தண்டனை வழங்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் இறந்த அஸ்வினியின் உடலை உறவினர்கள் வாங்க சம்மதம் தெரிவித்தனர்.

இதனை அடுத்து அஸ்வினியின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக தொடங்கியது. இதில் ஏராளாமான பொது மக்கள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனை அடுத்து அஸ்வினியின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது.

அஸ்வினியின் உடலுக்கு ஏராளமான பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி