Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

பி வி சிந்து ட்விட்டரில் இண்டிகோ விமான நிலைய ஊழியர் மீது புகார்

பி வி சிந்து ட்விட்டரில் இண்டிகோ விமான நிலைய ஊழியர் மீது புகார்

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து இண்டிகோ விமான நிலைய ஊழியர் மீது தனது ட்விட்டரில் புகார் கூறியுள்ளார். இந்நிலையில் இன்று பி வி சிந்து மற்றும் அவரின் தந்தை இருவரும் ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு செல்வதற்கு இண்டிகோ விமானத்திற்கு சென்றுள்ளனர். 

பி.வி சிந்து விமானத்தில் செல்வதற்கு போர்டிங் பாஸ் வாக்கிய பின் அவரது லக்கேஜ் ஆன பேட்மிண்டன் பேக்கை இண்டிகோ ஊழியர் அஜீதேவ் என்பர் எடுக்கும் போது தவறுதலாக கையாளப்பட்டதாகவும், இதனை பார்த்த பி.வி சிந்து கவனமாக கையாளுங்கள் என்று கூறியிருக்கிறார். இதனை பொருட்படுத்தாமல்  இண்டிகோ ஊழியர் அலட்ச்சியப்படுத்தியுள்ளார்.       இதனை பி வி சிந்து தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இதில் இண்டிகோ ஊழியர் அஜீதேவ் நடவடிக்கை மற்றும்  நடந்து கொண்ட விதம் எனக்கு கசப்பான அனுபவம் என்றும் இவர்கள் போன்று ஊழியர்கள் இருப்பதினால் நிறுவனத்திற்கு கெட்ட பேர் ஆகின்றது என்றும் கூறியுள்ளார்.  

இதனை தொடர்ந்து விமான பணிப்பெண்மணி அஷிமா எங்களுக்கு நல்ல விதத்தில் நடந்து கொண்டு ஆலோசைகள் கூறினார். அதன் பின்னர் நாங்கள் மும்பைக்கு வந்தோம், அஜீதேவ் போன்று ஊழியர்கள் இருக்கும் இடத்தில் அஷிமா போன்று ஊழியர் இருப்பது ஆச்சர்யமாக இருப்பதாகவும் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.  

 

பி வி சிந்து ட்விட்டரில் இண்டிகோ விமான நிலைய ஊழியர் மீது புகார்