Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

உத்திரபிரதேசத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 6 இளைஞர்கள் பலி

6 Youths dead while crossing the railway track in Uttar Pradesh Hapur District

உத்திரபிரதேசம், ஹபுர் மாவட்டத்தில் உள்ள பில்குவா ரயில் நிலையத்தில் சர்வோதயர் பகுதியை சேர்ந்த 7 இளைஞர்கள் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர். அப்போது ரயில் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் மீது ரயில் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்த 2 வாலிபர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர். இதில் ஒரு வாலிபர் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் ஒரு வாலிபர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் திருமண விழாவில் சமையல் பணியை முடித்து விட்டு திரும்பிய பொது இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அப்பகுதி மக்களை சமாதான படுத்தியுள்ளனர். உயிரிழந்த வாலிபர்கள், சலீம் (20), விஜய் (18), ஆரிப் (18), சமீர் (15) மற்றும் ஆகாஷ் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மருத்துவமனையில் உயிரிழந்த வாலிபர் ராகுல் என்பதும் தெரிய வந்துள்ளது.

மற்றொருவர் உயிருக்கு போராடி வருவதாக ரயில்வே காவல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தண்டவாளத்தை கடக்க முயன்ற 6 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உத்திரபிரதேசத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 6 இளைஞர்கள் பலி