Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

டெல்லி சென்ற விஸ்தாரா விமானத்தில் பணிப்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த 62 முதியவர் கைது

62 வயது முதியவர் விஸ்தார விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

விஸ்தாரா நிறுவனத்தை சேர்ந்த விமானமொன்று லக்னோவிலிருந்து டெல்லிக்கு கடந்த 24-ஆம் தேதி சென்றுள்ளது. இதில் ராஜிவ் வசந்த் தானி என்ற 64 வயது முதியவர் விமானத்தில் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். விமானம் டெல்லி வந்தடைந்தவுடன் பாதிக்கப்பட்ட பெண் காவல் அதிகாரிகளிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

இதன் பிறகு காவல் அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். இவர் புனேவை சேர்ந்தவர். பணிப்பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் அவர் மீது விதி 354A-ன் படிவழக்கு பதிவு செய்துள்ளது. இதனால் அவருக்கு மூன்று வருட சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம் என காவல் அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து விஸ்தாரா விமான நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் "கடந்த 24-ஆம் தேதி டெல்லி சென்ற விமானத்தில் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை நிகழ்ந்ததாக புகார் வந்தது. இது குறித்து காவல் அதிகாரிகளிடம் எங்களது தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல் அதிகாரிகள் அவர் மீது "ஏப்ஐஆர்(FIR)" பதிவு செய்துள்ளனர். இந்த புகார் குறித்து எங்கள் நிறுவனம் சார்பில் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லி சென்ற விஸ்தாரா விமானத்தில் பணிப்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த 62 முதியவர் கைது