Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சிவகார்த்திகேயனின் 15வது படத்தையும் தயாரிக்கும் ஆர்டி ராஜா

ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, SK14 படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தினையும் 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' படம் கடந்த 13ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயனின் ரெமோ, வேலைக்காரன் போன்ற படங்களுக்கு பிறகு இந்த படத்தினையும் 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்டி ராஜா தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் 14வது படத்தினையும் 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் விஞ்ஞானியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசைப்புயல் இசையமைத்து வருகிறார். தற்போது சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தினையும் 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்டி ராஜா தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் தனது 15வது படத்திற்கு இயக்குனர் பிஎஸ் மித்ரனுடன் இணைந்துள்ளார்.

'இரும்புத்திரை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிஎஸ் மித்ரன் தனது முதல் படத்திலே ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவருடைய அடுத்த படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் பணிகளை தற்போது படக்குழு துவங்கியுள்ளது. இந்த படத்தில் பணிபுரியவுள்ள நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பினை விரைவில் படக்குழு வெளியிட உள்ளது.

சிவகார்த்திகேயனின் 15வது படத்தையும் தயாரிக்கும் ஆர்டி ராஜா