Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஓநாய்கள் ஜாக்கிரதை படத்தில் நடிக்க மறுத்த ரித்விகா

onaigal jakirathai movie release date

'கபாலி' படத்தில் நடித்த நடிகர் விஸ்வந்த் கதாநாயகனாக தற்போது நடித்துள்ள படம் 'ஓநாய்கள் ஜாக்கிரதை'. இவர் தற்போது விக்ரமின் 'ஸ்கெட்ச்', விஷாலின் 'சண்டக்கோழி 2' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷ்வந்த், ரித்விகா, இயக்குனர் ஏ.வெங்கடேஷ், அம்ருதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் ஜே.பி.ஆர். இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஆதிஷ் உத்ரியன் இசையமைத்துள்ளார். மகேஷ் கே.தேவ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படம் குறித்து இயக்குனர் ஜேபிஆர் கூறும்போது "இந்த படம்  குழந்தைகள் கடத்தலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம். இந்த படத்தில்  திரில்லர், திகில் கலந்த கதையம்சம் உள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது. குழந்தை கடத்தலில் ஈடுபடுகிறவர்களை மனம் திருந்த வைக்கும் படமாக இருக்கும். 

இந்த படத்தில் ஒரு முக்கியமான காட்சியில் நடிகை ரித்விகா நடிக்க மறுத்துவிட்டார். இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குனர் ஏ வெங்கடேஷ் நடித்துள்ளார். இவரை ரித்விகா கீழே தள்ளி நெஞ்சில் காலால் மிதிப்பது போன்ற ஒரு காட்சியை படமாக்கினேன். ஆனால் இந்த காட்சியை ரித்விகாவிடம்  விளக்கி சொன்னபோது, “இயக்குனர் வெங்கடேஷ் வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர் அவரை நான் எப்படி காலால் மிதிப்பது?” என்று கூறி ரித்விகா நடிக்க மறுத்துவிட்டார். உடனே வெங்கடேஷ் ரித்விகாவை கூப்பிட்டு ‘தயங்காமல் நடியுங்கள்’ என்று சமாதான படுத்தினார். அதன்பின்னர் தான் மனதை தேத்தி கொண்டு ரித்விகா நடித்தார். குழந்தைகள் கடத்தல் விழிப்புணர்வு படமாக தயாராகி இருக்கும் இந்த படம் அரசு விருதை பெறும் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

ஓநாய்கள் ஜாக்கிரதை படத்தில் நடிக்க மறுத்த ரித்விகா