Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கனமழையால் நிலச்சரிவில் சிக்கிய நடிகர் ஜெயராம் குடும்பம்

கேரளா நிலச்சரிவில் சிக்கிய நடிகர் ஜெயராம் குடும்பத்தை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

கேரளாவில் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் கனமழையால் கேரளா மாநிலமே வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து கொண்டிருக்கிறது. கேரளாவில் உள்ள 35 அணைகள் நிரம்பியுள்ளதால் கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் 10 அடி உயரம் வரை தேங்கி நிற்கிறது. இதனால் ஏராளமான பொது மக்கள் தங்களது வீடுகளின் மொட்டை மாடிகளில் தஞ்சம் புகுந்து மீட்பு பணிகளுக்கு தகவல் அளித்து வருகின்றனர்.

இதனால் மீட்பு பணிகளும் ஹெலிகாப்டர் மூலமும் படகுகள் மூலமும் அவர்களை பத்திரமாக மீட்டு முகாம்களில் தங்க வைத்துள்ளனர். இயற்கையை பொறுத்தவரை பிரபலங்கள், பொது மக்கள் என்ற பாகுபாடே கிடையாது. அதற்கேற்ப இந்த வெள்ளப்பெருக்கில் பிரபலங்களும் சிக்கி தவித்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் தான் பிரபலங்கள் தானும் மனிதன் என்பதை உணர்கின்றனர். முன்னதாக வெள்ளத்தில் வீட்டிற்குள் சிக்கியிருந்த நடிகர் ப்ரித்விராஜின் தாயார் மல்லிகா என்பவரை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டு முகாமில் தங்க வைத்தனர்.

இதனை தொடர்ந்து தற்போது நடிகர் ஜெயராம் குடும்பமே நிலச்சரிவில் சிக்கியுள்ளது. தன்னுடைய மனைவி, மகள் ஆகியோருடன் குடும்பமாக காரில் திருச்சூரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் அவருடைய ஜெயராமின் கார் மற்றும் அருகே வந்து கொண்டிருந்த லாரி, கார்கள் உள்ளிட்டவையும் நிலச்சரிவில் சிக்கியுள்ளது. பிறகு தகவல் அறிந்த பிறகு காவல் அதிகாரிகள் விரைவாக வந்து அவர்களை மீட்டுள்ளனர். தற்போது காவல் நிலையத்தில் தனது குடும்பத்துடன் தஞ்சம் அடைந்துள்ளார்.

கனமழையால் நிலச்சரிவில் சிக்கிய நடிகர் ஜெயராம் குடும்பம்