Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

தமிழக காவல் துறைக்கு கமல்ஹாசன் ட்விட்டரில் நன்றி

தமிழக காவல் துறைக்கு கமல்ஹாசன் ட்விட்டரில் நன்றி

சென்னையில் தொடர் மழை காரணத்தினால் பள்ளி, கல்லூரி, தொழில் நுட்பம் சம்பந்தப்பட்ட பணிகள் என அனைத்திலும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிப்புக்குள்ளாகி வருகிறது.  இந்நிலையில் சில பகுதிகளில் தாழ்வான இடங்களின் வீட்டுகளிலும் மழைநீர் புகுந்ததால் மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.     

இதன் காணத்தினால் உயிர் இழப்புகளும் நடைபெற்று வருகிறது. இதனால் காவல் துறை அதிகாரிகள் மழைநீரால் பாதிப்புகள் ஏற்பட்டால், இலவச அவசர உதவி எண்ணை அழைக்குமாறு புது விண்ணப்பத்தை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மழைநீர் பாதிப்புகள் ஏற்படும் இடங்களிலும் ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். 

சென்னையில் மழைநீர் மீட்பு பணிகளை மேற்கொள்ள பேரிடர் மீட்பு குழுக்கள் ஈடுபட்டு வருகின்றனர். மழைநீர் நிவாரப்பணியில் ஈடுபட காவல் துறையினருக்கு, சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணத்தினால் மழைநீர் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல் துறையினரை பாராட்டும் வகையில் நடிகர் கமல்ஹாசன் நன்றியை தனது ட்விட்டரில் தெரிவித்தார். மேலும் காவலர்களை போல் தங்களது கடமைகளை செய்வதற்கு தமிழர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.    இதனை தொடர்ந்து 'நல்ல குடிமகன் சீருடை அணிந்தாலும் அணியாவிட்டாலும் பிரகாசிப்பர்' என்றும் கமல் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.   

தமிழக காவல் துறைக்கு கமல்ஹாசன் ட்விட்டரில் நன்றி