Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ரசிகர்களின் போராட்டத்திற்கு சூர்யாவின் அன்பான வேண்டுகோள்

actor surya tweet for anbaana fans

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு அமைந்த படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படம் தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா முதன் முதலாக வருமான வரித்துறை அதிகாரியாக நடித்துள்ளார். முன்னதாக சூர்யா நடிப்பில் வெளிவந்த படங்களில் நடிகர் சூர்யாவின் வசனங்களும் சண்டை காட்சிகள் மட்டுமே இடம் பெற்றது. இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்டு காட்சி அளித்துள்ளார். படம் வெளியானது தொடர்ந்து சூர்யா அவ்வப்போது ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இவருடைய எஸ்கேப் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யாவின் உயரத்தை பற்றி சன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளர்கள் விமர்சித்ததாக நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உயரம் முக்கியம் அல்ல, உள்ளமே முக்கியம். சன் டிவியை  கடுமையாக கண்டிக்கிறோம்,

தரம் தாழ்த்தி பேசாதே வரம்பு மீறி பேசுவது கருத்து சுதந்திரம் ஆகாது. மன்னிப்பு கேட்கும் வரை போராடுவோம் என்று சூர்யாவின் ரசிகர்கள் போராடி வருகின்றனர். தனது ரசிகர்களின் போராட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்கு டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் "தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற." என்று தெரிவித்துள்ளார்.

ரசிகர்களின் போராட்டத்திற்கு சூர்யாவின் அன்பான வேண்டுகோள்