Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சொந்த மகள் மீது நடிகர் விஜயகுமார் போலீசில் புகார்

சொத்து விவகாரம் தொடர்பாக நடிகர் விஜயகுமார் தனது மகளான வனிதா விஜயகுமார் மீது புகார் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களுள் ஒருவரான நடிகர் விஜயகுமார் 1960ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் நடிகர் மற்றும் சீரியல் நடிகராகவும் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சென்னை மதுரவாயலில் உள்ள ஆளப்பாக்கத்தில் பெரிய பங்களா வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை நீண்ட வருடங்களாக சினிமா படப்பிடிப்பிற்காக வாடகைக்கு விட்டு வருகிறார். சமீபத்தில் இந்த பங்களாவை தனது மகள் வனிதாவின் சினிமா படப்பிடிப்பிற்காக வாடகைக்கு விட்டுள்ளார்.

ஆனால் தற்போது நடிகையான வனிதா, அந்த பங்களாவை காலி செய்ய மறுத்துள்ளார். இதனால் நடிகர் விஜயகுமாருக்கும் அவரது மகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மோதல் முற்றிப்போக நடிகர் விஜயகுமார் நடிகை வனிதா மீது மதுரவாயலில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்த விசாரணையை தற்போது காவல் துறை மேலாளரான ஜார்ஜ் மில்லர் என்பவர் மேற்கொண்டு வருகிறார்.

இதன் பிறகு நடிகை வனிதாவிடம் இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தியதில், இந்த வீட்டில் எனக்கும் பங்கு இருக்கிறது, இதனால் காலி செய்ய முடியாது என பிடிவாதமாக பேசுவதாக போலீசார் கூறுகின்றனர். இதுதவிர இந்த புகார் குறித்து கேள்வி கேட்க சென்ற பத்திரிகையாளர்களை, நடிகை வனிதா அவதூறாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே நடிகை வனிதா தனது குடும்ப விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவரது தந்தையான விஜயகுமாரும் அவர் மீது புகார் அளித்துள்ளார். 

சொந்த மகள் மீது நடிகர் விஜயகுமார் போலீசில் புகார்