Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ராஜமௌலி இரட்டை நாயகர்கள் கதையில் இணையும் கீர்த்தி சுரேஷ்

இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீம ராஜா மற்றும் சாமி ஸ்கொயர் படங்களுக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சண்டக்கோழி 2, சர்கார் போன்ற படங்கள் அடுத்ததாக வெளிவரவுள்ளது. இதில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இயக்குனர் ஏஆர் முருகதாஸின் அடுத்த படைப்பான இந்த படம் வரும் தீபாவளியில் வெளியாகவுள்ளது.இந்த படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக மலையாளத்தில் மோகன்லாலுடனும், சசிகுமாருடன் இணைந்து 'சுந்தரபாண்டியன் 2' படத்திலும் நடிக்க உள்ளார்.

இந்த படங்களுக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரமாண்ட இயக்குனரான ராஜமௌலி பாகுபலி, பாகுபலி 2 படங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோரை வைத்து இரட்டை நாயகர்கள் கொண்ட கதையை உருவாக்கி வருகிறார்.இந்த படத்தில் ராம்சரனுக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் விஜய், விக்ரம், விஷால், சூர்யா போன்ற முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ள கீர்த்தி சுரேசுக்கு தெலுங்கு சினிமாவிலும் நல்ல வரவேற்புகள் இருந்து வருகிறது. முன்னதாக தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நேனு சைலஜா, நேனு லோக்கல் மற்றும் மகாநதி போன்ற படங்கள் வெளியாகியுள்ளது. இதில் சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷிற்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. இதன் பிறகு மீண்டும் தெலுங்கு சினிமாவில் நடிப்பதற்கு ரெடியாகி விட்டார்.

ராஜமௌலி இரட்டை நாயகர்கள் கதையில் இணையும் கீர்த்தி சுரேஷ்