Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஏஆர் முருகதாஸை தொடர்ந்து படக்குழுவினருக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வேண்டுகோள்

பேட்ட படக்குழுவினருக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'பேட்ட'. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டருக்கு பிறகு செகண்ட் லுக்கை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. பர்ஸ்ட் லுக்கை விட செகண்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. சிறு வயது தோற்றத்தில் முறுக்கு மூசையுடன் ரஜினியின் தோற்றம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆனால்  படக்குழுவினர் மற்றும் படப்பிடிப்பு தலத்தில் ரஜினியை காண வரும் ரசிகர்கள் செல்போன் மூலம் புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதில் படப்பிடிப்பு தலத்தில் சண்டை காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்களும் வெளியாகி விடுகின்றன.இதனால் இந்த படத்தின் இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ், படக்குழுவினருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவருடைய டிவிட்டரில் "அன்பான பேட்ட படக்குழுவினருக்கு, தயவு செய்து பேட்ட படப்பிடிப்பு தலத்தில் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை எடுத்து வெளியிட வேண்டாம். உங்களுடைய ஆதரவு எங்களுக்கு தேவை. சில செய்தித்தாள்களில் லீக் ஆனா விடியோக்களை வைத்து செய்தியாக வெளியிடுகின்றனர். இதனை கண்டு மிகவும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளது. இது நியாயமற்ற செயல்" என்று அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக இயக்குனர் ஏஆர் முருகதாஸும் 'சர்கார்' படம் குறித்து படக்குழுவினர் மற்றும் நடிகர்கள் ஏதாவது பேட்டி அளித்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார். இவருக்கு பிறகு தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜும் தனது படக்குழுவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏஆர் முருகதாஸை தொடர்ந்து படக்குழுவினருக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வேண்டுகோள்