Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

தனுஷ் மற்றும் விஜய் சேதுபதியை இயக்க விரும்பும் இயக்குனர் அனுராக் காஷ்யப்

இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்துள்ள அனுராக், தனுஷ் மற்றும் விஜய் சேதுபதியை இயக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனரான அனுராக் கிஷ்யப் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் 'இமைக்கா நொடிகள்'. இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு வில்லனாக முதன் முறையாக அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா மற்றும் நயன்தாரா ஆகியோரது நடிப்பில் வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

இந்த படத்திற்கு பிறகு அனுராக், மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் உருவாகி வரும் 'மூத்தோன்' படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளார். இது தவிர இந்தியில் உருவாகிவரும் 'மன்மார்சியான்' என்ற படத்தை இயக்கி தயாரித்து வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு தமிழில், தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து புது படம் ஒன்றை இயக்க உள்ளதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். முன்னதாக நடிகர் தனுஷின் 'ஆடுகளம்' படம் வெளியான போது தனுஷின் நடிப்பை அனுராக் பாராட்டியிருந்தார்.

தற்போது வெளியாகியுள்ள அனுராக்கின் 'இமைக்கா நொடிகள்' படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியின் முந்தைய படங்களில் இவருடைய நடிப்பை பார்த்து பாராட்டியுள்ளார். இருவரின் நடிப்பையும் பாராட்டிய பிறகு இவர்களை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார். நடிகர் தனுஷின் 'புதுப்பேட்டை' படத்தில் விஜய் சேதுபதி சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதன் பிறகு இரண்டாவது முறையாக தனுசும் விஜய் சேதுபதியும் இயக்குனர் அனுராக் படத்தின் மூலம் இணைய உள்ளனர். 

தனுஷ் மற்றும் விஜய் சேதுபதியை இயக்க விரும்பும் இயக்குனர் அனுராக் காஷ்யப்