Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஐஸ்வர்யாவுக்கு சித்தப்பாவாக மாறிய பாலாஜி - ஷாரிக் பிரிவினால் கண்ணீருக்குள் மூழ்கிய பிக்பாஸ் வீடு

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவும் கண்ணீருடனும் 50 நாளை எட்டியுள்ளது.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி நேற்றுடன் 50வது நாளை நிறைவு செய்துள்ளது. நேற்றைய நிகழ்ச்சி ரசிகர்களுக்கு டிவிஸ்ட்டாக அமைந்துள்ளது. ஐஸ்வர்யாவின் கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் கொடுக்கப்பட்ட டாஸ்க் நிறைவடைந்தது. ஆனால் டாஸ்க்கில் ஹிட்லர் கதாபாத்திரத்தில் தங்களை சித்திரவதை செய்த ஐஸ்வர்யாவை மன்னிப்பார்களா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இது வெறும் விளையாட்டு தான் உன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்தாய் என்று சக போட்டியாளர்கள் ஐஸ்வர்யாவுடன் சமரசம் ஆனார்கள்.

ஆனால் ஐஸ்வர்யாவுக்கும் பாலாஜிக்கு இடையே இடைவெளி அதிகமாகி கொண்டே சென்றது. இனி என்ன நடக்குமோ என்று எதிர்பார்த்திருந்த தருணத்தில் நேற்றைய நிகழ்ச்சியின் தொடக்கத்திலே ஐஸ்வர்யா, பாலாஜியின் பாச பிணைப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்பா, மகள் போன்று உறவாடிய இருவரின் பாசமும் ரசிகர்களை பூரிப்படைய செய்தது. இதன் பிறகு நேற்று ஏவிக்சன் என்பதால் மும்தாஜ், பொன்னம்பலம், பாலாஜி, ஷாரிக், மகத் ஆகியோரில் யார் வெளியேற்றப்படுவார் என்று ஆர்வம் நிறைந்திருந்தது.

பிறகு இதில் பொன்னம்பலமும், மும்தாஜும் காப்பாற்ற பட்டார்கள். மீதமிருந்த ஷாரிக், மகத், பாலாஜி ஆகியோரில் ஷாருக் வெளியேற்றப்பட்டார். இதனால் பிக்பாஸ் போட்டியாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.ஷாரிக்கின் பிரிவை தாங்க முடியாமல் பிக்பாஸ் குடும்பமே கண்ணீரில் மூழ்கியது. அனைவரின் கண்ணீரையும் பார்த்து மறுபுறம் அவரது அம்மாவும் கண்ணீர் வடிக்கிறார். ஷாரிக் வெளியேற்றப்பட்டதும் அவர் பிக்பாஸின் புது தலைவராக யாஷிகாவை தேர்ந்தெடுத்துள்ளார். மீதமுள்ள 50 நாளில் என்னனென்ன கலவரங்கள் நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாப்போம். 

ஐஸ்வர்யாவுக்கு சித்தப்பாவாக மாறிய பாலாஜி - ஷாரிக் பிரிவினால் கண்ணீருக்குள் மூழ்கிய பிக்பாஸ் வீடு