Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

வீட்டை நினைத்து கண்ணீர் விடும் மும்தாஜ் விட்டுக்கொடுக்காத நித்யா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மும்தாஜ் அதிகப்படியான வேலைப்பளுவால் அழுது கொண்டே இருக்கிறார்.

தற்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களிடையே வாக்குவாதங்கள் அதிகரித்துள்ளது. அதிலும் மும்தாஜ் மற்றும் நித்யா ஆகியோருக்கிடையே ஒவ்வொரு நாளும் கருத்து வேறுபாடு அதிகரித்து கொண்டே செல்கிறது. நித்யாவின் கணவரான தாடி பாலாஜியும், தனது மனைவி மற்ற போட்டியாளர்களிடம் கெட்ட பெயர் வாங்குவதை தாங்கி கொள்ள முடியாமல் புலம்பி வருகிறார். எப்படியாவது தாடி பாலாஜியையும், நித்யாவையும் சேர்த்து வைக்க வேண்டும் என்ற நோக்கில் சென்றாயனும் இதர போட்டியாளர்களும் முயற்சித்து வரும் நிலையில் நித்யா ரொம்ப பிடிவாதமாக இருக்கிறார்.

இந்நிலையில் நேற்று சென்றாயனிடம் மனம் விட்டு பேசிய நித்யா, தன்னை வேறு ஒருவருடன் சம்பந்தபடுத்தி பேசியதை கண்ணீருடன் தெரிவித்துள்ளார். ஒரு புறம் இவர்களுக்கு இடையே இருக்கும் பிளவுகள் அதிகமாக மும்தாஜும் சமையல் கேப்டன் என்ற முறையில் அதிகரிக்கும் வேலை பளுவால் அழுந்து கொண்டே இருக்கிறார். நேற்று ஹாரிக் ஹாசனை பார்த்து தனது மருமகன் போல் இருப்பதாய் நினைத்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இது தவிர கேப்டன் ஜனனியின் பேச்சை கேட்காத 9 போட்டியாளர்களால், ஏற்கனவே இருந்த 2200 புள்ளியில் 1000 புள்ளியை பிக்பாஸ் கழித்து விட்டது.

இந்நிலையில் நேற்றைய முடிவில் டாஸ்க் என்ற பெயரில் ஜோடி ஜோடியாக இணைத்து நடிக்க சொல்லியுள்ளனர். இதில் மும்தாஜும், தாடி பாலாஜியும் குழந்தை தனமாக நடிக்க வேண்டும். இதனை வாய்ப்பாக வைத்து தாடி பாலாஜி தனது மனைவியுடன் விளையாடி வருகிறார். தற்போது ரசிகர்கள் அனைவரின் பிரார்த்தனையும் தாடி பாலாஜியும், நித்யாவும் ஒன்று சேர வேண்டும் என்ற நோக்கில் உள்ளது. மேலும் எப்படியாவது ஹாரிக், ஐஸ்வர்யா இருவரும் ஒன்று சேர வைக்க வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இருவரையும் வைத்து கலாய்த்து வருகின்றனர் சக போட்டியாளர்கள். இனி வரும் நிகழ்ச்சியில் என்ன நடக்குமென்பதை பொறுத்திருந்து பாப்போம். 

வீட்டை நினைத்து கண்ணீர் விடும் மும்தாஜ் விட்டுக்கொடுக்காத நித்யா