Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மறுபடியும் ஐஸ்வர்யாவை ஏவிக்சனுக்கு தள்ளிய கமல் ஹாசன்

நேற்று பிக்பாஸில் சிவனேனு இருந்த சென்றாயனை வெளியே அனுப்பியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் 85வது நாளை ஏவிக்சனுடன் கடந்துள்ளது. நேற்று இந்த வார ஏவிக்சன் மூலம் சென்றாயன் வெளியேற்றப்பட்டார். தேவையில்லாமல் இந்த அப்பாவியை ஏன் வெளியேத்துனாங்க..என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு நான் காரணமில்லை, நீங்கள் வாக்களிக்காமல் விட்டதே காரணம் என கமல் ஹாசன் ரசிகர்களை குற்றம் சாட்டினார். இந்த வார நாமினேஷனில் விஜயலட்சுமி, மும்தாஜ், ஐஸ்வர்யா, ஜனனி, சென்றாயன் ஆகியோரில் ஐஸ்வர்யா அதிகபட்சமாக 34 லட்சம் வாக்குகள் பெற்று காப்பாற்ற பட்டார்.

ஆனால் அனைவரையும் விட குறைவாக 26 லட்சம் வாக்குகள் பெற்ற சென்றாயன் வெளியேற்றப்பட்டார். இது அனைவரையுமே அதிர்ச்சி அடைய செய்தது. சென்ற வாரம் ஐஸ்வர்யா, மும்தாஜ் மற்றும் விஜயலட்சுமி ஆகியோரின் சத்தம் மட்டுமே அதிகம் இருந்தது. ஆனால் சென்றயானை ஏன் வெளியேற்ற பட்டார் என்பது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

இதில் ஹவுஸ் மெட்ஸ் முதல் ரசிகர்கள் வரை அனைவருமே மும்தாஜ் வெளியேற்றப்படுவார் என ஆர்வமாக இருந்தனர். ஆனால் நேற்று எதிர்மறையாக சென்றாயனை வெளியே தள்ளி விட்டனர். தற்போது பிக்பாஸில் 7பேர் மட்டுமே உள்ளனர். மேலும் நேற்று கமல் ஹாசன் என்னுடைய முடிவு ஐஸ்வர்யாவை ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றிருக்கலாம் என தெரிவித்திருந்தார். எப்படியோ இந்த வாரம் தப்பித்த அவரை மீண்டும் ஏவிக்சனுக்கு இந்த வாரம் கமல் மூலமாக நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.

இது தவிர இன்றைய ப்ரோமோவில் இன்னும் இரண்டு பேரை ஏவிக்சனுக்கு அனுப்ப கலந்துரையாடியுள்ளார். ஆனால் அதிலும் கருத்து வேறுபாடு அதிகரித்ததால் இரண்டு மூன்றாக மாறியுள்ளது. இதன் மூலம் இந்த வார ஏவிக்சனுக்கு ரித்விகா, ஐஸ்வர்யா ஆகியோரை சேர்த்து நான்கு பேர் நாமினேட் ஆக உள்ளனர். இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ் மெட்ஸ் ஒவ்வொருவரும் பிக்பாஸ் கோப்பையை கைப்பற்ற ஆர்வமுடன் செயல்பட்டு வருகின்றனர். பொறுத்திருந்து பாப்போம்

மறுபடியும் ஐஸ்வர்யாவை ஏவிக்சனுக்கு தள்ளிய கமல் ஹாசன்