Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

உங்களுக்கு ஒரு நண்பனா ஆதரவு அளிப்பேன் நித்யா

மத்த போட்டியாளருக்கு மகிழ்ச்சி தரும் விதமாக கடிதம் அமைந்துள்ள நிலையில் தாடி பாலாஜிக்கு மட்டும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 71வது நாள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. மகத் வெளியேறிய பிறகு யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் தனிமை படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு கூட்டத்துடன் இணைக்க புது டாஸ்க்கை பிக்பாஸ் கொடுத்தது. இந்த டாஸ்க் மூலம் மற்றவர்கள் செய்த தவறை சுட்டி காட்டி அவர்களுக்கு அந்தந்த இமோஜிக்களை கொடுக்க வேண்டும். இந்த டாஸ்க் மூலம் யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோர் உள்ளுக்குள் வைத்திருந்த கருத்து வேறுபாட்டை கொட்டி மத்த ஹவுஸ்மேட்சுடன் சகஜமாக பழக ஆரம்பித்தனர்.

இதனை தொடர்ந்து போட்டியாளர்களுக்கு அவரவர் வீட்டில் இருந்து கடிதங்களும் பரிசுகளும் அனுப்பப்பட்டது. இந்த கடிதத்தை படித்த ஜனனி, ஐஸ்வர்யா, சென்ட்ராயன், டேனியல், ரித்விகா என அனைவருமே கண்ணீர் விட்டு அழுதனர். இன்றும் மீதமுள்ளவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் படிக்கப்படுகிறது. தற்போது பிக்பாஸ் ப்ரோமோவில் பாலாஜிக்கு அவருடைய மனைவி நித்யா மற்றும் அவருடைய குழந்தை ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்.

இந்த கடிதத்தில் நீங்கள் புறம்பேசுவதை தவிர்த்து இன்னும் மாற வேண்டும், உங்களுக்கு பக்கபலமாக ஒரு நண்பனாக ஆதரவு அளிப்பேன். நண்பனாக மட்டும் என்று நித்யா தெரிவித்துள்ளார். இதனை பார்த்து பாலாஜி கண்ணீர் விட்டு அழுகின்றனர். 70 நாட்கள் பிரிந்த பிறகும் தன்னை மனைவி நித்யா புரிந்து கொள்ள வில்லையே என்று நினைத்து அழுது கொண்டிருக்கிறார். தற்போது பிக்பாசை காணும் அனைத்து ரசிகர்களுக்கும் பாலாஜி அவருடைய மனைவியுடன் ஒன்று சேர வேண்டும் என்று எண்ணம் எழுகின்றது. ஆனால் அவருடைய மனைவி மட்டும் பிக்பாஸ் வீட்டில் இருந்தது போல் கல்நெஞ்சத்துடன் பிடிவாதமாகவே இருப்பது ரசிகர்களை மனவேதனை அடைய செய்துள்ளது.

உங்களுக்கு ஒரு நண்பனா ஆதரவு அளிப்பேன் நித்யா