Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கார்கில் போர் சொந்த மண்ணுனு உசுப்பேத்தி எல்லாரையும் பிரிச்சிட்டானுகளே

ஆரம்பத்தில் கலகலப்பாக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் தற்போது ரணகளத்துடனும், கலவரமாகவும் காணப்படுகிறது.

கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் தமிழ் இரண்டாவது சீசன் நேற்றுடன் 38 நாட்களை கடந்துள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை பாடகர் ரம்யாவை பிக்பாஸ் வெளியேற்றியுள்ளது. ஆரம்பத்தில் கலகலப்பாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் தற்போது டாஸ்க் என்ற பெயரில் வரும் புது புது விதிமுறைகளால் கலவரமாக மாறி வருகிறது. தற்போது ஒருவருக்கொருவர் முகத்திலும் கருத்து வேறுபாடுகள் நிறைந்து காணப்படுகிறது.

ஆரம்பத்தில் யார் யாருடன் நெருக்கமாக பழகுகிறார் என்பதை கண்காணித்து தற்போது டாஸ்க் ஒன்றில் தனி தனியாக பிரித்து சண்டையை மூட்டி விட்டு வருகிறது பிக்பாஸ். நேற்று நடந்த பிக்பாஸில் கார்கில் போர், மண்ணுக்கான போராட்டம் என்று போட்டியாளர்களை உசுப்பேத்தி அவர்களை இரு அணிகளாக பிரித்து விட்டது.

மும்தாஜ் மற்றும் ஜனனி தலைமையில் செயல்படும் இரு அணிகளுக்கும் நடுவராக, மும்தாஜை அம்மாவாக நினைத்து பழகி வந்த ஷாரிக்கை நடுவராக நியமித்துள்ளார். இதனால் இருவருக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து கொண்டு வருகிறது.இது தவிர இன்று விஜய் டிவி வெளியிட்டுள்ள ப்ரோமோவில் மும்தாஜ், ஷாரிக் இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் ரசிகர்களை வியப்படைய செய்துள்ளது.

இது தவிர நேற்று நடந்த பிக்பாஸில், ஐஸ்வர்யாவுக்கும் ரிதிவிகாவுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு ஐஸ்வர்யாவை அழ வைத்து விட்டது. இதெல்லாம் ஒரு விளையாட்டாக நினைக்காத போட்டியாளர்களும் சண்டையை அடக்காமல் பெரிது படுத்தி தான் வருகின்றனர். தற்போது ரணகளமாக காட்சி அளிக்கும் பிக்பாசில் அடுத்தடுத்து என்ன ஆகும் என்று ரசிகர்களும் பிக்பாஸின் எதிர்பார்ப்பிற்கேற்ப ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர். இதற்காக தானே ஆசைப்பட்டாய் பிக்பாஸ்..

கார்கில் போர் சொந்த மண்ணுனு உசுப்பேத்தி எல்லாரையும் பிரிச்சிட்டானுகளே