Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேற போகும் அந்த நபர்

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜனனி ஐயர் வெளியேற உள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 76வது நாள் நேற்று நிறைவடைந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக ப்ரீஸ்.. ப்ரீஸ்.. என போட்டியாளர்களை கதறவிட்டு மொத்த மதிப்பெண்ணையும் பிக்பாஸே எடுத்து கொண்டார். நேற்று சென்றயானின் தலைவர் பதவிக்காலமும் நிறைவடைந்தது. இதன் பிறகு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக கூடைப்பந்து டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இந்த டாஸ்க்கில் அதிக பந்துகளை பொறுக்கி யாஷிகா வெற்றி பெற்றார். இதனால் இந்த வார தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த விளையாட்டில் நடுவராக இருந்த பாலாஜிக்கும், சென்றாயனுக்கும் கடும் வாக்கு வாதங்கள் நடைபெற்றது. கடந்த ஒரு வாரமாக பிக்பாஸ் வீட்டையே கண்ணீரால் கரைய விட்டனர். ஆனால் இனி வரும் நாட்களில் புது புது டாஸ்க்கால் மிகவும் கலவரமாக மாற உள்ளது.

இது தவிர கடந்த வாரம் மகத் வெளியேற்ற பட்ட நிலையில் இந்த வார எலிமினேஷன் யார் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த ஏவிக்சனுக்கு டேனியல், பாலாஜி, ஜனனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இதில் வெளியேறப்போவது ஜனனியாக இருக்க அதிகபட்ச வாய்ப்புள்ளது. டேனியல், பாலாஜி இருவரில் ஒருவர் சென்றாலும் பிக்பாஸ் வீடு களையிழந்து விடும். இன்னும் 24 நாட்களே உள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டில் 9பேராக இருந்த பிக்பாஸ் வீட்டில் 8பேராக குறைய உள்ளனர். 

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேற போகும் அந்த நபர்