Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

தமிழக அரசே ஷோபியாவை விடுதலை செய் - பா ரஞ்சித்

மாணவி ஷோபியாவிற்கு ஆதரவாக லட்சக்கணக்கான பொது மக்கள் குரல் கொடுத்து வரும் நிலையில் இயக்குனர் பா ரஞ்சித்தும் ஷோபியாவிற்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கந்தன் காலனியை சேர்ந்தவர் ஷோபியா. இவருடைய தந்தை சாமி மற்றும் தாயார் மனோகரி. தந்தை அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இருந்து ஓய்வு பெற்றவர், தாயார் தலைமை நர்ஸாக இருந்து ஓய்வு பெற்றவர். ஷோபியா தற்போது கனடாவில் முனைவர் படத்திற்காக பிஎச்டி படித்து கொண்டு வருகிறார். இவர் கனடாவில் இருந்து சென்னைக்கு உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

பின்னர் சென்னையில் இருந்து தூத்துக்குடி விரைந்துள்ளனர். அதே விமானத்தில் தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள பாஜகவை சேர்ந்த தமிழிசை சவுந்தராஜனும் பயணித்துள்ளார். அப்போது தான் பாஜகவிற்கு எதிராக கோஷமிட்டுள்ளார். இதனால் கடுப்பான தமிழிசை, அவருடன் சண்டை போட்டு அவர் மீது போலீசில் புகார் அளிக்க, போலீசாரும் அவரை கைது செய்துள்ளனர். அவரை 15நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் இந்திய முழுவதும் வைரலாகி பரவியுள்ளது. டிவிட்டரிலும் பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக  பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் ஷோபியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். தற்போது இயக்குனர் பா ரஞ்சித்தும் இது ஜனநாயகத்தின் குரல், தமிழக அரசே ஷோபியாவை விடுதலை செய், பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்றும் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

தமிழக அரசே ஷோபியாவை விடுதலை செய் - பா ரஞ்சித்