Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இரும்புத்திரை வெற்றியை தொடர்ந்து கார்த்தியுடன் இணைந்து பிரமாண்ட படத்தை இயக்கவுள்ள பிஎஸ் மித்ரன்

புதுமுக இயக்குனரான பிஎஸ் மித்ரனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படங்கள் மூலமும் ஏராளமான புதுமுக கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சாதித்து வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்களிடமும் புதுமுக நடிகர், இயக்குனர் போன்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். இந்த வரிசையில் தற்போது விஷாலின் 'இரும்புத்திரை' படத்தின் மூலம் புதுமுக இயக்குனராக அறிமுகமாகி தனது முதல் படத்திலே மாபெரும் வெற்றியை கண்டுள்ளார் இயக்குனர் பிஎஸ் மித்ரன்.

இவருடைய இயக்கத்தில் வெளியான இந்த படத்தை முதலில் புதுமுக கலைஞர்களை கொண்டு உருவாக்குவதாக இருந்துள்ளார் மித்ரன். ஆனால் இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும் என்று முன்னணி நடிகர்களை வைத்து தயாரிப்பாளராகவும் சாதித்துள்ளார் விஷால். மித்ரனின் இரும்புத்திரை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அடுத்த பிரமாண்ட படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படத்தில் நாயகனாக நடிகர் கார்த்தி நடிக்க உள்ளார். இந்த படத்தை சிங்கம் 2, மோகினி போன்ற படங்களை தயாரித்துள்ள பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படம் கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு பிறகு கார்த்தி நடிப்பில் உருவாகும் 17வது படமாகும். விரைவில் இந்த படத்தில் பணிபுரியவுள்ள இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட உள்ளனர்.

இரும்புத்திரை வெற்றியை தொடர்ந்து கார்த்தியுடன் இணைந்து பிரமாண்ட படத்தை இயக்கவுள்ள பிஎஸ் மித்ரன்