Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

பிரமாண்ட கூட்டணியுடன் உருவாகவுள்ள இயக்குனர் பிஎஸ் மித்ரனின் அடுத்த படைப்பு

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் அர்ஜுன் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த 'இரும்புத்திரை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிஎஸ் மித்ரன். விஷால், சமந்தா, அர்ஜுன் போன்ற பல திரைபிரபலங்கள் நடிப்பில் ஆன்லைன் கொல்லையை மையமாக வைத்து வெளியான இந்த படம் ஒரு விழிப்புணர்வு படமாகவே அமைந்துள்ளது.

இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் பிஎஸ் மித்ரன் தன்னுடைய அடுத்த படைப்பிற்கு  நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளார். முன்னதாக இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்த படத்தில் பணிபுரியவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பினை 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன்படி பிஎஸ் மித்ரனின் இரண்டாவது படத்திலும் நடிகர் அர்ஜுன் வில்லனாக இணைந்துள்ளார். இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ளார். ஏற்கனவே சிவகார்த்திகேயனின் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்திற்கு யுவன் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர ஒளிப்பதிவாளராக ஜியார்ஜ் சி வில்லியம்ஸ் என்பவரும், எடிட்டராக ரூபனும் இணைந்துள்ளனர்.

பிரமாண்ட கூட்டணியுடன் உருவாகவுள்ள இயக்குனர் பிஎஸ் மித்ரனின் அடுத்த படைப்பு