Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மறைந்த முன்னணி நடிகர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஸ்ரீதேவி வினோத் கண்ணா ஆகியோருக்கு தேசிய விருதுகள்

நடிகை ஸ்ரீதேவி மற்றும் ஆனந்த் கண்ணா ஆகியோருக்கு சிறந்த நடிகர்களுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட போன்ற மொழிகளின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி, இவர் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி துபாயில், திருமண விழாவிற்கு கலந்து கொண்ட இவர், ஒரு அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவருடைய இழப்பிற்கு அனைத்து திரையுலகம் மற்றும் ஏராளமான ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர். இவர் உடல் ராஜமரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தற்போது இந்தியாவின் தேசிய விருதுகள் திரை கலைஞர்களுக்கும், சிறந்த படங்களுக்கும் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மறைந்த முன்னணி நடிகையான ஸ்ரீதேவியை கவுரவிக்கும் விதமாக அவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான 'மாம்' என்ற ஹிந்தி படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் பிரபல நடிகர் மற்றும் லோக் சபாவின் உறுப்பினரான வினோத் கண்ணா, கடந்த ஆண்டு 2017இல் , ஏப்ரல் மாதத்தில் கேன்சர் நோயால் மும்பையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 1968-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை 45 வருடங்களாக 144 படங்களில் நடித்துள்ளார். இதில் இவருக்கு பிலிம்பேர் விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இவரை கவுரப்படுத்தும் விதமாக சிறந்த நடிகருக்கான 'தாதாபாலகே விருது' வழங்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னணி நடிகர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஸ்ரீதேவி வினோத் கண்ணா ஆகியோருக்கு தேசிய விருதுகள்