Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இந்த குழந்தைகளுக்காக ஒரு விடுதி கட்ட வேண்டும் - நடிகை ஹன்சிகாவின் கனவு

தான் தத்தெடுத்து வளர்த்து வரும் குழந்தைகளுக்காக சொந்தமாக விடுதி கட்ட வேண்டும் என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

2011இல் 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானதில் இருந்து ஹன்சிகாவிற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பினால் கடந்த 8 ஆண்டுகளில் விஜய், சூர்யா, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, கார்த்தி, சிம்பு, சிவகார்த்திகேயன் என போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். சொந்த ஊர் மும்பை வட இந்தியாவாக இருந்தாலும் தென்னிந்திய பெண்ணாக ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார்.

சினிமா துறையில் மட்டுமின்றி சமூக அக்கறை கொண்ட இவர் ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். இவர் இது வரை 31 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவருக்கு பட வாய்ப்புகள் தற்போது குறைந்திருந்தாலும், இவருடைய குணத்திற்கும், நடிப்பிற்கும் எப்போதுமே ரசிகர்களிடம் ஆதரவு இருந்து வருகின்றது.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஹன்சிகா கூறும்போது "என்னுடைய வாழ்க்கையில் இது வரை நிறைய வெற்றி தோல்விகளை கண்டுள்ளேன். இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்திருந்தாலும் தமிழிலே அதிக கவனம் செலுத்தி வருகிறேன். 8 வருடங்களில் 48 படங்களில் நடித்து முடித்துள்ளேன். என்னுடைய 50வது படமாக 'மஹா' என்ற ஹாரர் படம் உருவாகி வருகிறது. சமீப காலமாக என்னுடைய உடல் நிலை குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நான் முன்பை விட 5 கிலோ மட்டும் தான் குறைந்துள்ளேன். இதற்காக பெரியதாக மெனக்கடவில்லை.பிடித்ததை மட்டும் சாப்பிட்டு, உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்து வருகிறேன், அவ்வளவு தான். இதுவரை 31 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். ஆனால் ஒன்றரை ஆண்டுகளாக புதியதாக குழந்தைகளை தத்தெடுக்க முடியவில்லை. இந்த குழந்தைகளுக்கு புதிய விடுதி ஒன்றை கட்டி தரவேண்டும் என்பதே என் கனவு. இதற்காக நான் வரைந்த ஓவியங்களை கண்காட்சிக்கு வைத்து நிதியுதவி திரட்ட போகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த குழந்தைகளுக்காக ஒரு விடுதி கட்ட வேண்டும் - நடிகை ஹன்சிகாவின் கனவு