Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஜூனியர் என்டிஆர் இயக்குனர்

ஜெய் லவ குசா படத்தின் இயக்குனர் ரவீந்திரா தற்போது மது போதையில் காரை ஒட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் சிக்கியுள்ளார்.

தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர் மற்றும் திரைக்கதை அமைப்பாளராக ரவீந்திரா சமீபத்தில் ஜூனியர் என்டிஆர் பார்ட்டியில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது மது போதையில் காரை ஒட்டி விபத்து ஏற்படுத்தியுள்ளார். இவர் தெலுங்கின் முன்னணி நடிகர்களான ரவி தேஜா, பவன் கல்யாண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரை வைத்து பவர், சர்தார் கப்பார் சிங் மற்றும் கடந்த ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த ஜெய் லவ குசா போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

இதில் ஜெய் லவ குசா என்ற படத்தில் ஜூனியர் என்டிஆர் நாயகனாக நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் கடந்த மே 20இல் ஜூனியர் என்டிஆரின் 35வது பிறந்த நாள் விழா பார்ட்டியுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த பார்ட்டியில் ஏராளமான திரை பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த பார்ட்டியில் ஜெய் லவ குசா இயக்குனர் ரவீந்திராவும் கலந்து கொண்டார். பார்ட்டியில் கலந்து கொண்டு மூக்கு முட்ட குடித்து விட்டு போதையில் காரை ஒட்டி கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது இரவு 11 மணிக்கு ஐதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள கபே அப்பாட் என்ற பகுதியை அடைந்த எதிர் வந்த மற்றொரு காரின் மீது மோதிவிட்டு நீக்காமல் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து தற்போது பாதிக்கப்பட்ட காரின் உரிமையாளர் ஹர்மிந்தர் என்பவர் புகார் அளித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தின் போது ஹர்மிந்தர் காரில் அவருடைய பெற்றோரும் இருந்துள்ளனர். இதனால் இயக்குனர் ரவீந்திரா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக அவரை தேடி வருகின்றனர். இதனால் இயக்குனர் ரவீந்திரா தற்போது தலைமறைவாக உள்ளார்.

மது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஜூனியர் என்டிஆர் இயக்குனர்