Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நாச்சியார் டீசரின் சர்ச்சையை குறித்து பேசிய ஜோதிகா

jyothika open talk with naatchiyaar teaser issue

நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையுலகில் ரீ - என்ட்ரி கொடுத்த ஜோதிகா பெண்ணைகளுக்கு முக்கியத்தும் கொடுக்கும் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பினை பெற்றிருந்தார். இந்நிலையில் இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான 'நாச்சியார்' படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இருந்து கடந்த நாட்களில் டீசர் வெளியானது. இந்த டீசரில் ஜோதிகாவின் வசனத்திற்கு விமர்சன ரீதியில் இருந்து பல எதிர்ப்புகள் எழுந்தது. மேலும் வழக்கு பதிவு செய்யும் அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஜோதிகா இந்த டீசரில் இடம் பெற்ற வார்த்தையை குறித்து கூறிய போது, நான் பேசிய வார்த்தை கெட்ட வார்த்தை தான். அதை மறுக்க வில்லை. ஆனால் தற்பொழுது இந்த வார்த்தை பல திரைப்படங்களில் ஆண்கள் பேசியிருக்கிறார்கள். முதல் முறையாக ஒரு பெண் பேசியதினால் இந்த அளவிற்கு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தில் நாச்சியார் துணிச்சலான அதிக வலுமிக்க கதாபாத்திரம். அது அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற வசனம் தான். அந்த காட்சியில் இன்னும் பல வசனம் வந்திருக்க வேண்டும். ஏனென்றால் அந்த காட்சி படத்தின் (கதை) ஒரு பகுதி. அந்த வசனம் பொருத்தமான இடத்தில் அமைந்துள்ளது. படத்தினை பார்க்கும் போது ரசிகர்கள் புரிந்து கொண்டு இருநூறு சதவீதம் ஒப்புக்கொள்வார்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.  

 வசனத்தின் மூலம் ஜோதிகாவின் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்த இந்நிலையில் தற்பொழுது ஜோ கூறியதை கேட்டு ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான ஆதரவுகள் அதிகரித்து வருகிறது. மேலும் படத்தின் புதுவித புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

நாச்சியார் டீசரின் சர்ச்சையை குறித்து பேசிய ஜோதிகா