Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கேரளா வெள்ளப்பெருக்கில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு கார்த்தி சூர்யா 25 லட்சம் நிதியுதவி

நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் கேரளா வெள்ளப்பெருக்கில் பாதிப்படைந்த மக்களுக்காக 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

கேரளா கனமழையால் ஏற்ப்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் விதமாக மீட்பு பணிகளும் துரிதமாக செயல்பட்டு வருகின்றன. கேரளா முதலமைச்சரான பினராயி விஜயனும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்க உள்ளதாக உறுதி அளித்துள்ளார்.

இதன் பிறகு தமிழ் சினிமா நடிகர் சங்க தலைவரான விஷால் கேரளாவில் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வரும் மக்களுக்கு உதவும் விதமாக நன்கொடைகளை திரட்டி வருகிறார். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கார்த்தி மற்றும் சூர்யா ஆகியோர் இணைந்து கேரளா வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக 25 லட்சம் நிதியுதவியை கேரளா முதலமைச்சர் பிரனாயி விஜயனிடம் அளித்துள்ளனர்.

மேலும் பெரும்பாலானோர் தங்களால் முடிந்த உதவிகளை கேரளா மக்களுக்கு செய்து வருகின்றனர். தற்போது கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருவதால் கேரளா மாநிலமே வெள்ளத்தில் மூழ்கி தவித்து வருகிறது. இதனால் கேரளா மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசு வலியுறுத்தியுள்ளது. 

கேரளா வெள்ளப்பெருக்கில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு கார்த்தி சூர்யா 25 லட்சம் நிதியுதவி