Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விஷாலின் சண்டக்கோழி 2வில் நடிகர் கார்த்தி

விஷாலின் சண்டக்கோழி 2 படத்தில் நடிகர் கார்த்தி தனது குரலை பதிவு செய்துள்ளார்.

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'சண்டக்கோழி 2' படம் வரும் அக்டொபர் 18ஆம் தேதியில் வெளியாகவுள்ளது. விஷாலின் 25வது படமான இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் வரலட்சுமி வில்லி அவதாரம் எடுத்துள்ளார்.

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர்.தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள இந்த படத்தில் நடிகர் கார்த்தி குரல் கொடுத்துள்ளார். பெரும்பாலான தமிழ் படங்களின் துவக்கத்தில், படத்தின் கதை அறிமுகத்திற்காக பிரபலங்கள் குரல் கொடுத்துள்ளனர்.

அந்த வகையில் 'சண்டக்கோழி 2' படத்திற்கும் நடிகர் கார்த்தி, முதல் பாகத்தில் என்ன நடந்தது இனி என்ன நடக்க போகிறது என்பதை சுருக்கமாக தெரிவிக்கும் விதமாக படத்தின் துவக்கத்தில் தனது குரலை பதிவு செய்துள்ளார். விஷாலும் கார்த்தியும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து படங்களில் நடிக்கா விட்டாலும், நடிகர் சங்க தலைவராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் பல பணிகளை சேர்ந்து செய்து வருகின்றனர். இந்நிலையில் விஷாலின் 'சண்டக்கோழி 2' படத்திற்காக கார்த்தி தனது குரலை பதிவு செய்துள்ளார்.

விஷாலின் சண்டக்கோழி 2வில் நடிகர் கார்த்தி