Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சூர்யா விஜய் ரசிகர்கள் சண்டையிட வேண்டாம் என தயாரிப்பாளர் வேண்டுகோள்

சமூக வலைத்தளங்களில் சூர்யா விஜய் ரசிகர்கள் சண்டையிட வேண்டாம் என தயாரிப்பாளர் ஒருவர் கேட்டு கொண்டுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் மெர்சல் படத்திற்கு பிறகு தற்போது உருவாகி வரும் படம் 'சர்கார்'. இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் லாஸ் வெகாஸில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் தீபாவளி விருந்தாக அமைய உள்ளது. இதனால் இந்த படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சர்கார் வெளியாகவுள்ள தீபாவளியில் சூர்யாவின் 'என்ஜிகே' படமும் வெளியாகவுள்ளது.

தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார். சர்கார் மற்றும் என்ஜிகே படங்கள் தீபாவளியில் மோத உள்ளதால் சூர்யா மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் போட்டி போட்டு கருத்து பதிவு செய்து வருகின்றனர். மேலும் சமீபத்தில் இயக்குனர் செல்வராகவனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதால் இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமானது.

இது குறித்து இயக்குனர் செல்வராகவன் "நான் நலமாக உள்ளேன். இது சிறு மருத்துவ பரிசோதனை தான். சில தினங்களில் என்ஜிகே படப்பிடிப்பு துவங்கும்" என்று அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சர்வதேச நண்பர்கள் தினமான நேற்று இந்த படத்தின் தயாரிப்பாளரான எஸ்ஆர் பிரபு தனது டிவிட்டரில் "ரசிகர்கள் பலர் என்ஜிகே படம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கான பதிலை தாமதமாக தெரிவிப்பதற்கு மன்னிக்கவும். படப்பிடிப்பு குறிப்பிட்ட தேதியில் இருந்து சற்று பின் தங்கியுள்ளது. படப்பிடிப்பை முடிக்க வேகமாக செயல்பட்டு வருகிறோம்.

இந்த படத்தின் அப்டேட் சில வாரங்களில் தெரிவிக்கிறேன். அதே நேரத்தில் ரசிகர்கள் இதற்காக சண்டையிட வேண்டாம். சண்டையிடுவதால் எந்த பயனும் இல்லை. அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார். தற்போது அஜித், விஜய், சூர்யா ரசிகர்கள் வலைத்தள சண்டைகள் அதிகமாகி கொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளியில்  விசுவாசம், சர்கார், என்ஜிகே போன்ற மூன்று முன்னணி நடிகர்களின் மோதவுள்ளது. இந்நாளுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

சூர்யா விஜய் ரசிகர்கள் சண்டையிட வேண்டாம் என தயாரிப்பாளர் வேண்டுகோள்