Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இரண்டாம் பாகத்தை உருவாக்கும் போதே மூன்றாம் பாகத்திற்கு ரெடியான நாடோடிகள் படக்குழு

நாடோடிகள் வரிசையின் மூன்றாம் பாகத்தின் மூலம் மீண்டும் இயக்குனர் சமுத்திரகனியுடன் இணைந்துள்ளதாக சசிக்குமார் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் கடந்த 2009இல் வெளிவந்து ரசிகர்களின் பேராதரவை பெற்ற படம் 'நாடோடிகள்'. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முந்தைய பாகத்தில் நாயகனாக நடித்து இயக்குனர் சசிகுமார் இந்த படத்திலும் நாயகனாக நடிக்கிறார். ஆனால் மற்றொரு நாயகனாக இந்த படத்தின் இயக்குனரான சமுத்திரக்கனியும் நடித்துள்ளார்.

இவர்களுக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் இணைந்து சூப்பர் சுப்பராயன், எம்எஸ் பாஸ்கர், பரணி, நமோ நாராயணன், ஞான சம்பந்தம், துளசி, ஸ்ரீ ரஞ்சனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தின் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து விரைவில் இசை மற்றும் ட்ரைலரை படக்குழு வெளியிடவுள்ளது.

இந்நிலையில் நாடோடிகள் 2 படத்தினை தொடர்ந்து அதன் மூன்றாம் பாகத்திலும் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடிக்க உள்ளதாக இயக்குனர் மற்றும் நடிகரான சசிகுமார் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். முன்னதாக இயக்குனர் சமுத்திரக்கனி சுப்ரமணியபுரம், நாடோடிகள், வெற்றிவேல், அப்பா மற்றும் நாடோடிகள் 2 போன்ற படங்கள் மூலம் சசிகுமாருடன் இணைந்து பணிபுரிந்துள்ளார். இந்த படங்களுக்கு பிறகு மீண்டும் நாடோடிகள் வரிசையின் மூன்றாம் பாகத்தில் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி கூட்டணி இணைந்துள்ளது.

இரண்டாம் பாகத்தை உருவாக்கும் போதே மூன்றாம் பாகத்திற்கு ரெடியான நாடோடிகள் படக்குழு