Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நொய்டாவில் நடைபெற்று வரும் சூர்யா 37 படப்பிடிப்பு

இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகவுள்ள சூர்யா 37 படத்தின் படப்பிடிப்பு நொய்டாவில் துவங்கப்பட்டுள்ளது.

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சூர்யா, இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் 'என்ஜிகே' படத்திலும், இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார். இதில் இயக்குனர் செல்வராகவனின் 'என்ஜிகே' படம் தீபாவளிக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து தாமதமானதால் படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த படத்தின் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்திலும் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சயிஷா சாகல் நடிக்க உள்ளார். இவர்களுடன் நடிகர் மோகன்லால், சமுத்திரக்கனி, போமன் இராணி, ஆர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நொய்டாவில் துவங்கியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சூர்யா ராணுவ அதிகாரி தோற்றத்திற்கு மாறியுள்ளார். போலீஸ் அதிகாரி, ராணுவ அதிகாரி படங்கள் சூர்யாவிற்கு நல்ல பெயரை கொடுத்துள்ளது. இவருடைய நடிப்பில் ஏற்கனவே ராணுவ அதிகாரியாக 'வாரணம் ஆயிரம்' படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் ராணுவ அதிகாரியாக நடிக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாதா படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார்.

நொய்டாவில் நடைபெற்று வரும் சூர்யா 37 படப்பிடிப்பு