Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இயக்குனர் மணிரத்னமின் செக்க சிவந்த வானம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் செக்க சிவந்த வானம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் 'NGK' படத்திலும் இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் பெயரிடப்படாத புது படத்திலும் நடித்து வருகிறார். ஒரு தயாரிப்பாளராகவும் தனது 2D என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் புது படங்களை தயாரித்து வருகிறார். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் இறுதியாக வெளியான 'கடைக்குட்டி சிங்கம்' 7 வாரங்களை கடந்து விவசாய மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளது.

இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'செக்க சிவந்த வானம்' படத்தில் சூர்யா நடித்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. இயக்குனர் மணிரத்னமின் மல்டி ஸ்டார் படமான இந்த படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந் சாமி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். முன்னதாக வெளியான இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

இந்நிலையில் சூர்யா, செக்க சிவந்த வானம் படப்பிடிப்பு தலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தனது மனைவியான ஜோதிகாவும் இந்த படத்தில் நடிப்பதால் அவரை காண வந்தாரா அல்லது சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாரா போன்ற கேள்விகளை ரசிகர்கள் பரப்பி வருகின்றனர். ஏற்கனவே சூர்யா, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ஆயுத எழுத்து' என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெளியான 'குரு' படத்திலும் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பணிபுரிந்துள்ளார். இது தவிர சூர்யா மற்றும் விஜய் இணைந்து நடித்த சூரியாவின் முதல் படமான 'நேருக்கு நேர்' படத்தின் தயாரிப்பாளரும் மணிரத்னம் தான். இதனால் மீண்டும் நீண்ட வருடங்களுக்கு பிறகு செக்க சிவந்த வானம் படத்தில் சூர்யா மணிரத்னமுடன் இணைந்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதற்கு விடை, படக்குழு அறிவித்தாலோ அல்லது படம் வெளியானால் மட்டுமே தெரிய வரும்.

இயக்குனர் மணிரத்னமின் செக்க சிவந்த வானம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா