Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சர்ச்சையில் சிக்கியுள்ள இயக்குனர் ஏஆர் முருகதாஸின் சர்கார்

கத்தி படத்தை தொடர்ந்து சர்கார் படத்திற்கும் கதை திருட்டு சர்ச்சை எழுந்துள்ளது.

இயக்குனர் ஏஆர் முருகதாஸ், தளபதி விஜய் கூட்டணியில் 'கத்தி' படத்திற்கு பிறகு அடுத்ததாக வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள படம் 'சர்கார்'. இந்த படத்தின் டீசர் கடந்த அக்டொபர் 19இல் வெளியாகி 2 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகின்றது. இதன் பிறகு இந்த படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் கதை திருடப்பட்டது என்று எழுத்தாளர் சங்கத்தில் வருண் என்பவர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் மீது புகார் கொடுத்துள்ளார். வருண் எழுதிய கதைக்கு 'செங்கோல்' என்று பெயர் வைத்துள்ளார். என்னுடைய கதையை 'சர்காராக' உருவாகியுள்ளதாக வரும் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகார் குறித்து விசாரிக்கும் போது 'சர்கார்' படத்தின் கதையும் 'செங்கோல்' படத்தின் கதையும் 90 சதவீதம் ஒத்து போவதாகவும் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஏற்கனவே விஜய், முருகதாஸ் கூட்டணியில் வெளியான 'கத்தி' படத்திற்கும் இதே கதை திருட்டு சர்ச்சை எழுந்தது. இதனை தொடர்ந்து தற்போது சர்காருக்கும் கதை திருட்டு சர்ச்சை எழுந்துள்ளது. தற்போதுள்ள நிலைமையில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் பெரும்பாலான படங்கள் இது போன்ற சர்ச்சையில் சிக்கி கொள்வது வாடிக்கையாகி விட்டது.

சர்ச்சையில் சிக்கியுள்ள இயக்குனர் ஏஆர் முருகதாஸின் சர்கார்