Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விக்ரம் பிரபு மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுனின் புதுப்பட தலைப்பு அறிவிப்பு

விக்ரம் பிரபுவின் அடுத்த படத்திற்கு வால்டர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் நடிகரான விக்ரம் பிரபு நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள '60 வயது மாநிறம்' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் அசுர குரு, துப்பாக்கி முனை போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இந்த படங்களை தொடர்ந்து விக்ரம் பிரபுவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் பிரபல இந்தி நடிகரான ஜாக்கி செராப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

இந்த படத்தினை அறிமுக இயக்குனரான அன்பரசன் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தின் டைட்டில் லுக்கை இயக்குனர் லிங்குசாமி வெளியிட்டுள்ளார். இதன்படி இந்த படத்திற்கு 'வால்டர்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நாயகி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் மூலம் ஆக்சன் கிங் முதன் முறையாக விக்ரம் பிரபுவுடன் இணைந்துள்ளார்.

முன்னதாக விஷாலுடன் இணைந்து 'இரும்புத்திரை' படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் தற்போது விஜய் ஆன்டனியுடன் இணைந்து 'கொலைக்காரன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டொபர் மாதத்தில் துவங்கவுள்ளது. இந்த படத்தினை மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் சிங்காரவேலன் என்பவர் தயாரிக்க உள்ளார். மேலும் இந்த படத்திற்கு 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் ரதன் இசையமைக்க உள்ளார்.

விக்ரம் பிரபு மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுனின் புதுப்பட தலைப்பு அறிவிப்பு