Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சொந்த கதையில் மீண்டும் காவல் அதிகாரியாக நடிக்க உள்ள விஷ்ணு விஷால்

ராட்சசன் படத்திற்கு பிறகு மீண்டும் விஷ்ணு விஷால் போலீசாக நடிக்க உள்ளார்.

வளர்ந்து வரும் நடிகரான விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் நடிப்பில் கடந்த 4ஆம் தேதியில் வெளியான 'ராட்சசன்' படம் வெற்றிகரமாக தற்போது வரையிலும் திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. தற்போதுள்ள நிலைமையில் இந்த படம் இரண்டு வாரத்தை கடந்து ஓடி கொண்டிருப்பது மிகப்பெரிய சாதனையாகும்.

இது படக்குழுவினரின் உழைப்பிற்கு கிடைத்த பலன் என்றே சொல்லலாம். இந்த படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் நடிப்பில் ஜகஜால கில்லாடி, சிலுகுவார் பட்டி சிங்கம் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் சிலுக்குவார் பட்டி சிங்கம் படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த படங்களுக்கு பிறகு தான் தாயார் செய்து வைத்திருந்த சொந்த கதையை வைத்து அதிலும் போலீசாக நடிக்க உள்ளார். நடிகரான விஷ்ணு விஷாலின் அப்பா காவல் அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். தன்னுடைய அப்பாவை சிறு வயதில் பார்த்த காட்சிகளில் இருந்து அவருடைய வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்கள் வரை ஒரு கதையாக தயார் செய்துள்ளார். இந்த கதையை விரைவில் படமாக்க உள்ளனர். இந்த படத்தில் விஷ்ணு விஷால் காவல் துறை அதிகாரியாக நடிக்க உள்ளார்.

சொந்த கதையில் மீண்டும் காவல் அதிகாரியாக நடிக்க உள்ள விஷ்ணு விஷால்