Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கலைஞர் கருணாநிதி இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி விளம்பரம்

தற்போது தமிழகத்தின் ஏராளமான இடங்களில் கருணாநிதி இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் வைரலாகி வருகிறது.

கடந்த 10 நாட்களாக உயிருக்கு போராடி வந்த திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் கருணாநிதியின் செல்கள் செயலிழந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் கலவரங்களை அடக்க முன்னேற்பாடுகளாக ஏராளமான காவல் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர மாநிலம் முழுவதும்  ஏராளமான இடங்களில் கண்ணீர் அஞ்சலி போஸ்டரும் அடிக்கப்பட்டு வருகிறது. இதனால் நாடே பரபரப்பாக காணப்படுகிறது.

ஆனாலும் திமுக தொடர்கள் தொடர்ந்து கருணாநிதி மீண்டு வர கோஷங்களை எழுப்பியபடி உள்ளனர். மேலும் ஏராளமான இடங்களில் வெளியூருக்கு செல்லும் ஆம்னி பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தகைய பரபரப்பான சூழலில் காவேரி மருத்துவமனையின் அடுத்த அறிக்கைக்காக தொண்டர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். இது தவிர வாட்சப், பேஸ்புக், ட்வீட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கலைஞர் கருணாநிதி இறந்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது. தற்போது காவேரி மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் படையெடுத்து வருகின்றனர். 

கலைஞர் கருணாநிதி இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி விளம்பரம்