Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

அதிமுக எம்பி சத்யபாமாவை கொலை செய்ய முயற்சி அவருடைய கணவர் கைது

திருப்பூர் அதிமுக லோக்சபா உறுப்பினர் சத்யபாமா கணவர் வாசுவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அதிமுக எம்பி சத்யபாமாவை கொலை செய்ய முயற்சி அவருடைய கணவர் கைது திருப்பூர் லோக் சபா எம்பியாக உள்ளவர் சத்யபாமா. இவருக்கு வயது 45. இவர் கடந்த 2014 தேர்தலில் திருப்பூர் தொகுதியில் அதிமுகவில் இருந்து லோக் சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கும் அவருடைய கணவர் வாசுவுக்கும் இடையே சமீப காலமாக மோதல் இருந்து வருகிறது.

கணவர் வாசு, கடந்த 2016இல் சத்யபாமாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வாசுவின் பெயரில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பலரிடம் கடன் பெற்றுள்ளதாகவும், தன்னிடம் இருக்கும் நிலத்தை அடமானம் வைத்த பணம் பெற்று தர வற்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதனால் எனக்கும், சத்யபாமாவுக்கும் 1990-இல் நடந்த திருமணத்தை ரத்து செய்யக்கோரி அந்த நோட்டீஸில் குறிப்பிட்டிருந்தார்.

இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதால் சத்யபாமா தற்போது கோபிசெட்டிபாளையம், ஸ்ரீநகரில் வசித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது வாசுவை, சத்யபாமாவை கொலை செய்ய முயற்சித்ததாக காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சத்யபாமாவின் சகோதரர் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் சத்யபாமாவின் கணவர் வாசுவை கைது செய்துள்ளனர்.

அதிமுக எம்பி சத்யபாமாவை கொலை செய்ய முயற்சி அவருடைய கணவர் கைது